Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Wednesday, January 23, 2008

பீமா


------------------------------------
இயக்கம் : லிங்குசாமி
நடிப்பு : விக்ரம், பிரகாஷ்ராஜ்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வருடம் : 2008
------------------------------------

கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் மரணம் எனும் பழமொழியை எக்கச்சக்க ரத்தத்தோடும் சத்தத்தோடும் சொல்லும் படம்தான் பீமா.


படம் ஆரம்பிச்சதிலிருந்து முடியற வரை படபட படபடன்னு ஆளாளுக்கு சுட்டுகிட்டே இருக்காங்க. சும்மா பீச்ல போய் சுண்டல் வாங்கற மாதிரி, போய் ஒருத்தர சுட்டுட்டு ஆளாளுக்கு திரும்பிபோறாங்க. இளம் வயதில் ராமேஸ்வரத்தில் வாழும் குட்டி விக்ரம் அப்பகுதியில் இருக்கும் ரெளடியான பிராகாஷ்ராஜால்( of course.. நல்லது செய்யற ரெளடிதான்) கவரப்பட்டு தானும் பிற்காலத்தில் ரெளடியாகனும்னு முடிவுபண்றார்.. பிற்காலத்தில் அப்படியே சேர்ந்திடவும் செய்யறார்.. அதுக்கப்புறம் என்ன.. ரகளைதான்.. சும்மா சுத்தி சுத்தி சண்டை போடறார்.. கிளைமாக்சுக்காக போலீசும் வருது.. எல்லாருமா சேந்து செத்துப்போறாங்க.. கடைசியில் ஒரு பன்ச் வேறு.. "ஆயுதத்துக்கு நல்லவன் கெட்டவனெல்லாம் தெரியாது. உபயோகிக்கப் படுபவன் மீது அது தன் குணத்தைக் காட்டும்.. அவ்வளவே.. " எப்படி இருக்கு? இதுதாங்க பீமா..


ஆனாலும் விக்ரம் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.. தனக்குக் கொடுக்கப் பட்ட கதாபாத்திரமாக மாற ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். முதல்காட்சியிலேயே அவரின் உழைப்பு தெரிகிறது.. ஆனால் இந்த படத்திற்கு இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்.. பாட்டுக்கு மட்டும் வந்து போறாங்க திரிஷா. (ஒரு பாட்டைத்தவிர மத்த எல்லா பாட்டுமே டூயட்தான்) . சண்டைக்காட்சிகள் உண்மையிலேயே ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. குறிப்பாக சண்டைக்காட்சிகளின் ஒளிப்பதிவு அருமை.. ஒரு மாதிரி ஹாலிவுட்தனமா தெரிஞ்சுது.. (Thanks to RD Rajasekar).


எல்லாம் சரி.. எங்கே போய்கிட்டு இருக்கு தமிழ் சினிமா? கதாநாயகன் தன்னெதிரில் வரும் பத்து பதினைந்து பேரை குருவி சுடுகிற மாதிரி சுட்டுகிட்டே முன்னேறுவதை, தியேட்டரில் என்அருகிலிருந்த ஒரு சிறுவன் பாப்கார்ன் கொறித்துக்கொண்டே ரசிக்கிறான். அந்த பிஞ்சு மனதில் பதிவது என்ன..? போன மாசம் செய்தித்தாளில் படித்த ஒரு செய்திதான் நினைவுக்கு வந்தது. மத்தியபிரதேசத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன், ஒரு சின்ன ஜியாமண்டரி பாக்ஸ் தகறாரில் சக மாணவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டதில் அந்த மாணவன் மரணமடைந்திருக்கிறான்.. இனிமேலாவது யோசிக்க வேண்டாமா..?

Friday, January 4, 2008

கல்லூரி

------------------------------------------------
இயக்கம் : பாலாஜி சக்திவேல்
தயாரிப்பு: ஷங்கர்
நடிப்பு : புதுமுகங்கள்
இசை : ஜோஸ்வா sriதர்
------------------------------------------------
பல கனவுகள் தரும் கல்லூரியில் கருகிய சில மலர்களின் கதை இந்த கல்லூரி. நாம் பெரும்பாலும் பார்த்துப் பழகாத கல்லூரியை கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர். இயல்பான கதாபாத்திரங்கள்.. நாயகன் நாயகியைத் தாண்டி விரிகின்றனர். குறிப்பாக கயல்விழி கதாபாத்திரம். முன்பாதியில் வரும் அரட்டை அரங்கம் தேவையில்லாத திணிப்பு. இசை நன்று, சில இடங்களில் காதல் சாயல். முத்துக்குமார் பளிச்சிடுகிறார். எல்லாம் சரி.. Climax தான்.. கொஞ்சம் ஒட்டாமல் நிற்கிறது.. திடுதிப்னு ஒரு Climax..அது ஏற்படுத்த வேண்டிய தாக்கம் ஏற்படாமல் ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது.

Wednesday, December 26, 2007

ஓரம் போ..!


------------------------------------
இயக்கம் : புஷ்கர் & காயத்ரி
இசை : G.V. பிரகாஷ்
வருடம் : 2007
நடிப்பு : ஆர்யா, பூஜா
------------------------------------

சென்னையில் ஆட்டோ ரேசிங் நடக்கிறது என்ற ஒரு வரியை நன்றாக மசாலா தேய்த்து பரபரப்பாய் தந்திருக்கின்றனர் புஷ்கரும் காயத்ரியும். கதாநாயகன் ரேசிங்கில் ராஜா.. அவ்வப்போது ஒரு ரேஸ் இடையிடையே கதாநாயகியுடன் காதல் இடையில் ஒரு வில்லன் என டிபிகல் கதை. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் மூன்று. ஒன்று ஆண்டனியின் படத்தொகுப்பு, அனேக இடங்களில் அட போட வைக்கிறது.. இரண்டாவது Son of Gun, படம் முடிந்த பின்னும் கதாநாயகனை விட இவர்தான் நினைவில் நிற்கிறார்.. பிகிள், சன் ஆப் கன், சப்ளை, ராணி என படம் முழுதும் வியாபித்திருக்கும் பாத்திரங்கள்.. நம்மூர் லெவலுக்கு ஒரு Fast and Furious பாத்த மாதிரி ஒரு உணர்வு. தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் புதுசா தர முயற்சி பண்ணியிருக்காங்க. பாக்கலாம்...!